பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2018 12:11
பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை முதல் சோமவாரத்தை யொட்டி, 1008 சங்காபிஷேகம் நடந்தது.
அதனையொட்டி நேற்று முன்தினம் (நவம்., 19ல்) மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு ஆகம விதிப்படி சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மதியம் 3:00 மணிக்கு கருவறை எதிரில் அலங்கார மண்டபத்தில் கலச ஸ்தாபனம் செய்து சங்குகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது.
மாலை 6:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர் நாகாபரணத்திலும், அம்பாள் பெரியநாயகி வெள்ளி அங்கி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். உற்சவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித் தார். இரவு 8:00 மணிக்கு சோடசோப தீபாராதனைகள் நடந்து, ரிஷப வாகனத்தில் உற்சவர் மூர்த்தி சுவாமிகள் வீதியுலா நடந்தது. நெல்லிக்குப்பம்: புவனாம்பிகை உடனுறை பூலோக நாதர் கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி சிறப்பு யாகம் நடத்தினர்.
பிறகு பூலோகநாதருக்கு சங்காபிஷேகமும் தீபாரதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பூலோகநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.