பதிவு செய்த நாள்
21
நவ
2018
12:11
தேனி: தேனி என்.ஆர்.டி., நகர் கணேச கந்தபெருமாள் கோயிலில் சிவனுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு, அபிஷேக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
* பங்களாமேடு: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பெண்கள், பக்தர்கள் பங்கேற்று அபிஷேக தரிசனம் பெற்றனர்.
* போடி: பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில், பிரதோஷத்தை முன்னிட்டு மரகத லிங்க அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் அருளாசி பெற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டன.
* போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், சித்தர்களால் கட்டப்பட்ட ஸ்ரீ கயிலாய கீழச்சொக்கநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேம், தீபாரதனைகள் நடந்தது. சிவனுக்கு சிறப்பு அலங்காரங்களை போடி ஜமீன்பரம்பரையை சேர்ந்த பாண்டி சுந்தரபாண்டியன் செய்திருந்தார். விழாவினை ஒட்டி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் அருளாசி பெற்றனர்.
* மேலச்சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேம், தீபாரதனைகள் நடந்தன.
* போடி பரமசிவன் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் கோயில் அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமையில் நடந்தது
* போடி சுப்பிரமணியர் கோயில், வினோபாஜிகாலனி மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.