பதிவு செய்த நாள்
21
நவ
2018
12:11
பந்தலூர்:பந்தலூர் அருகே, எருமாடு சிவன் கோவிலில், கோவில் கமிட்டி, வி.எச்.பி., பிரசார்சமிதி இணைந்து, ஐஸ்வர்ய யாக பூஜை மற்றும் இந்து சம்மேளன, அன்னதான நிகழ்ச்சியை நடத்தின. பந்தலூர் தாலுகா செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். கோவில் கமிட்டி தலைவர் சதானந்தன் தலைமை வகித்தார்.
பேரூர் ஆதின மடாதிபதி இளையபட்டம் மருதாச்சல அடிகளார் பேசியதாவது:இந்து மக்கள் கல்வியில் சிறப்பு பெற வேண்டும். வாரம் ஒருமுறை கோவிலுக்கு செல்லுதல், இந்த சமய
அடையாளங்களாக விபூதி, சந்தனம், குங்குமம் அணிந்து செல்வதை பின்பற்ற வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பை தடுத்து, நீராதாரங்களை பாதுகாக்கவும் ஒன்றிணைய வேண்டும். அரசியல், இனத்தால் வேறுபடுவதை களைந்து இணைந்து செயல்படவும், சினிமா, சீரியல்கள் குறித்து பேசுவதை தவிர்த்து மனித முன்னேற்றம் குறித்து பேச வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி சுந்தரம் பேசுகையில், எருமாடு சிவன் கோவில் வளாக பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும், என்றார்.தொடர்ந்து, வி.எச்.பி., அகிலபாரத இணை செயலாளர் சத்யம், மாநில அமைப்பாளர் சண்முகம், ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி சுரேஷ் மற்றும் நிர்வாகிகள், கோவில் கமிட்டியினர் பங்கேற்றனர். கோவில் கமிட்டி செயலாளர் தாமோதரன் நன்றி கூறினார்.