திருவேங்கடம்:கரிவலம்வந்தநல்லூர் மேலரதவீதியில் அமைந்துள்ள பிரம்மஸ்ரீ சிவராஜ யோகி சுவாமிகள் ஜீவசமாதி கோயிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. தைப்பூசத்தன்று நடந்த பவுர்ணமி பூஜையில் கரிவலம்வந்தநல்லூர் தலைமையாசிரியர் ஆறுமுகம் ஆன்மீக சொற்பொழிவாற்றினார். நடுவர் நித்யானந்த சுவாமிகள் ஆசியுரையாற்றினார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை இக்கோவில் நிர்வாகக்கமிட்டி கணபதிசுந்தரம் மற்றும் கமிட்டியினர் செய்திருந்தனர்.