பதிவு செய்த நாள்
27
நவ
2018
11:11
தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது. தர்மபுரி எஸ்.வி., ரோடு சாலை விநாயகர் கோவிலில், காலை, 6:00 மணிக்கு, சிறப்பு அபி?ஷகம் மற்றும் பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு, மூலவருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, விநாயகர் உற்சவர் ஊர்வலம் நடந்தது. இது, எஸ்.வி., ரோடு, கடைவீதி, காந்தி சாலை, வெளிப்பேட்டை தெரு, சுண்ணாம்புக்கார வீதி உள்ளிட்ட, முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதேபோல், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், அன்னசாகரம் விநாயகர் கோவில் உட்பட, அனைத்து விநாயகர் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது.