இளையான்குடி:இளையான்குடி அருகே மேலாயூர் சிங்கத்துரைப்பட்டியில் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி யாகசாலை பூஜை, கணபதி ஹோமம் நடந்தன. தொடர்ந்து காலை 10:00 மணிக்கு கோபுரகலசங்கள், மூலஸ்தானத்தில் புனிதநீர் ஊறறப்பட்டது. காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தன. அன்னதானமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.