கன்னிவாடி:கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், 108 சங்காபிஷேகம் நடந்தது. மேற்கு தொடர்ச்சி மலையடிவார மலைக்குன்றில், மெய்கண்ட சித்தர் குகை அருகே சோமலிங்க சுவாமி கோயில் உள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை சோமவாரங்களில், உலக உயிர்களின் நன்மைக்காக, சங்காபிஷேகம் நடந்து வருகிறது.
நேற்று (நவம்., 26ல்), 2வது சோமவாரத்திற்கான 108 சங்காபிஷேகம் நடந்தது. ஓம்கார விநாயகர், நந்தி, சோமலிங்கசுவாமிக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. மெய்கண்ட சித்தர் குகையில், வேதி தீர்த்தம் நிரப்பப்பட்ட 108 சங்குகளுக்கு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு சங்காபிஷேகம் நடந்தது.