விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் லட்சுமி நரசிம்ம சுதர்சன ஹோமம் நடந்தது. கார்த்திகை மாதத்தில் சக்கரத்தாழ்வார் அவதரித்த நாளை முன்னிட்டு நேற்று முன் தினம் (நவம்., 25ல்) மாலை 6:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது.
நேற்று (நவம்., 26ல்) காலை 7:15மணிக்கு புண்யாஹவாசஜனம், லட்சுமி நரசிம்ம சுதர்சன ஹோமம் நடந்து பூர்ணாஹூதி முடிந்து கடம் புறப்பாடாகி புனித கலச நீர் ஊற்றி வீர ஆஞ்சநேயர் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.