பதிவு செய்த நாள்
30
நவ
2018
12:11
தர்மபுரி: அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று கொடியேற்றம் மற்றும் சிறப்பு யாகபூஜை நடந்தது. தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த, தட்சணகாசி காலபைரவர் கோவில் உள்ளது. இதில், பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று காலை, 7:00 மணிக்கு, காப்பு கட்டுதல், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் மற்றும் வாஸ்து சாந்தியுடன் கொடியேற்றம் நடந்தது. பகல், 1:00 மணிக்கு, சிறப்பு யாகம், 108 சங்காபி?ஷகம் நடந்தது. இன்று காலை, 5:00 மணிக்கு, விஸ்வரூப தரிசனம், கணபதி ஹோமம், 64 பைரவர், யாகதச ருத்ர, ஹோமம், கோ பூஜை, அஸ்வ பூஜை, 64 வகையான அபி?ஷகம் நடக்கிறது. தொடர்ந்து, 18 குருக்கள் கொண்டு, ஒரு லட்சத்து, எட்டு அர்ச்சனை செய்து, பைரவருக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட உள்ளது. இரவு, 10:30 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய் வற்றல், 108 கிலோ மிளகு கொண்டு, சத்ரு சம்ஹார யாகம், பைரவயாகம், குருதி பூஜை நடக்கிறது. இரவு, 2:00 மணிக்கு, நாய் வாகனத்தில் பைரவர் ஊர்வலம் நடக்கிறது. காலை, 3:00 மணிக்கு, 1,008 லிட்டர் பாலபிஷேகம் நடக்கிறது. நாளை காலை, 8:00 மணிக்கு, கொடியிறக்கம், மஞ்சள் நீராட்டு நடக்கிறது.