பதிவு செய்த நாள்
30
நவ
2018
01:11
திருத்தணி:திருத்தணி முருகன் கோவில் உண்டியலில், 28 நாட்களில், பக்தர்கள், 69 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 540 கிராம் தங்கத்தை காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.திருத்தணி முருகன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து, காணிக்கையாக, பணம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை, மலைக்கோவிலில் உள்ள உண்டியல்களில் செலுத்துகின்றனர்.
அந்த வகையில், 28 நாட்களில் உண்டியலில் செலுத்திய பக்தர்களின் காணிக்கைகள், கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோர் முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோவில் ஊழியர்களால் எண்ணப்பட்டன.அப்போது, 69 லட்சம் ரூபாய், 540 கிராம் தங்கம், 7,740 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கைகளாகச் செலுத்தப்பட்டிருந்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.