Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 2013ல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ... சிதம்பரம் நடராஜர் கோவிலில் 20ல் நாட்டியாஞ்சலி விழா துவக்கம்! சிதம்பரம் நடராஜர் கோவிலில் 20ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தங்க குடங்கள் உள்ளே: பத்மநாபசுவாமி கோவிலில் பரிகார பூஜைகள் ஒத்தி வைப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 பிப்
2012
10:02

திருவனந்தபுரம் : தேவ பிரசன்ன பரிகார பூஜைகளுக்கு பயன்படும் தங்க குடங்களை, பொக்கிஷ அறைகளில் இருந்து எடுக்க முடியாததால், பூஜைகள் ஒத்தி வைக்கப்பட்டன. கேரளா திருவனந்தபுரம், பத்மநாபசுவாமி கோவிலின் பாதாள அறைகளில், பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் வைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் ஏதேனும் பூஜைகள் நடக்காமல் உள்ளதா, தவறுகள் நடந்துள்ளதா என்பது போன்றவற்றை அறிய, கடந்தாண்டு தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது. அதில், குறிப்பிட்டபடி பல்வேறு பரிகார பூஜைகள் அவ்வப்போது, கோவிலில் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம், கோவிலில் கலச பூஜை மற்றும் தங்க சீவேலி நிகழ்ச்சியும் நடைபெற இருந்தது. இதில், கலச பூஜைக்கு, 160 தங்க குடங்கள் தேவை. இக்கோவிலை பொறுத்தவரையில், தங்க குடங்களை வைத்து தான் கலச பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதற்காக நிறைய தங்க குடங்கள், கோவில் பாதாள அறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கடந்த மார்கழி மாதம், கோவிலில் சந்தன அபிஷேக நிகழ்ச்சி நடந்தது. அப்போது, பாதாள அறையில் இருந்து, 200க்கும் மேற்பட்ட தங்க குடங்கள் எடுக்கப்பட்டன. பின்னர், அவைகள் மீண்டும் பாதாள அறையில் வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, திருவனந்தபுரம் சார்பு கோர்ட் கண்டனம் தெரிவித்திருந்தது. தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை கோர்ட் ஏற்காமல், உடனடியாக தங்க குடங்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க, கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து, தங்க குடங்கள் மீண்டும் பாதாள அறையில் வைத்து சரிபார்க்கப்பட்டன. இதை அடுத்து, கோர்ட் அட்வகேட் கமிஷனரை நியமித்து, அவரது மேற்பார்வையில் தான் பொக்கிஷங்களை வெளியே எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனால், நேற்று முன்தினம், நடக்கவிருந்த பரிகார பூஜைக்கு தங்க குடங்களை எடுக்க முடியாமல் போனது. தொடர்ந்து பரிகார பூஜைகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், வரும் 20ம் தேதி முதல், பாதாள அறையில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆசி வழங்க முன்னோர் நம் வீட்டு வாசலில் காத்திருக்கும் காலம் தான் மகாளய பட்சம். பித்ருக்களின் ஆசி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் சந்திர கிரகணம் முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சந்திர கிரகணத்திற்குப் பிறகு கோவில் நடை இன்று திறக்கப்பட்டன.திருமலையில் ... மேலும்
 
temple news
கோவை; சாதுர்மாஸ்ய பூஜை மற்றும் சாதுர் மாதம் விரதத்தை ஸ்ரீ சக்கர மகாமேருபீடம் பிலாஸ்பூர்ஸ்ரீ சக்கர ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, பந்தல்களில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar