பதிவு செய்த நாள்
04
டிச
2018
12:12
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, மதகொண்டப்பள்ளியில், அரிகேசவ சுவாமி பார்வதி தேவி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில், சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுவது வழக்கம். அப்போது, விவசாயம் செழிக்க, காய்கறி அலங்காரம் செய்யப்படும். அதன்படி, நேற்று காலை, அரிகேசவ சுவாமி மற்றும் பார்வதி தேவிக்கு தனித்தனியாக, உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், குடை மிளகாய், சவ்சவ், பூசணி உட்பட பல்வேறு காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. விளை நிலங்களில் விளைவிக்கப்பட்ட, நிலக்கடலையை, விவசாயிகள் எடுத்து வந்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். மாலை, 6:30 மணிக்கு, கோவிலை சுற்றி, 10 ஆயிரத்து ஒன்று விளக்கு ஏற்றப்பட்டு, சுவாமி வீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.