நத்தம்:நத்தம் கோவில்பட்டியில் உள்ள பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோயிலில் கார்த்திகை மாத ஏகாதசி விழா நடந்தது. பால், சந்தனம், பன்னீர், இளநீர், மஞ்சள்நீர், தேன், தயிர், புஷ்பம், திருமஞ்சணம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.