இடைகோட்டை:ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை தர்காவில் வரும் டிச.18 முதல் 3 நாட்கள் சந்தன உருஸ் ஊர்வலம் நடக்கிறது.இடையகோட்டையில் உள்ள தர்காவில் ஆண்டு தோறும் சந்தன உருஸ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா டிச.8 அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிச.17 அன்று வாசனை மாலையுடன் ஊர்வலம் நடக்கிறது. டிச.18 முதல் டிச.20 வரை 3 நாட்கள் சந்தன உருஸ் ஊர்வலம் நடக்கிறது.
3 நாட்களிலும் இன்னிசைக் கச்சேரி, வாண வேடிக்கைகள், இசைகச்சேரி நடக்க உள்ளது. டிச.21 அன்று சந்தனம் வழங்குதல் நிகழ்ச்சியும், மாலையில் புனிதக்கொடி இறக்குதலும் நடைபெறும். பரம்பரை தர்கா டிரஸ்ட்டி சையது மீரான் ஏற்பாடுகளை செய்துள்ளார்.