பந்தலூர்: பந்தலூர் அருகே உப்பட்டியில் செயல்பட்டு வரும் புனிதஜார்ஜ் தேவாலய பங்கு மக்களின் சார்பில், நெல்லியாளத்தில் அமைந்துள்ள ஆரோக்கியமாதா தேவாலயம் செயல்பட்டு வருகிறது. இதன் ஆண்டு திருவிழா நடந்தது.
முன்னதாக உப்பட்டி புனிதஜார்ஜ் தேவாலயத்திலிருந்து முன்னாள் பங்குதந்தை ஷாஜிபிளாச் சிறா தலைமையில் சிலுவை ஏந்திய ஊர்வலம் துவங்கியது. ஊர்வலம் நெல்லியாளம் ஆரோக்கியமாதா தேவாலயத்தில் நிறைவு பெற்றது. பின்பு, சிறப்பு திருப்பலி நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உப்பட்டி தேவாலய பங்கு தந்தை மார்ட்டின்விலங்குபாறா தலைமையில், தேவாலய கமிட்டி பொருளாளர் குரியாக்கோஸ், செயலாளர் எல்டோ உள்ளிட்ட நிர்வாகிகள், பங்கு மக்கள் செய்திருந்தனர்.