பதிவு செய்த நாள்
05
டிச
2018
10:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கார்த்திகை மாதம் குபேர பெருமாள், தேய்பிறை சதுர்த்தியில், கிரிவலம் சென்று குபேரலிங்கத்துக்கு பூஜை செய்வதாக பக்தர்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. இந்த நேரத்தில், பக்தர்கள் கிரிவலம் சென்று, குபேரலிங்கத்திடம் பிரார்த்தனை செய்தால், நிரந்தர வேலை, தொழில் வளர்ச்சி, கடன் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி, இன்று மதியம், 12:47 முதல் நாளை மதியம், 12:41 வரை சதுர்த்தி திதியில் குபேர கிரிவலம் நடக்கிறது. இன்று மாலை, 4:00 மணி முதல், 5:00 மணிக்குள் அண்ணாமலை குபேரலிங்கத்துக்கு குபேரன் பூஜை செய்யப்படும், என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.