பதிவு செய்த நாள்
05
டிச
2018
10:12
திருப்பூர்: திருப்பூர், பெரியாண்டிபாளையம் மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழாவில் நேற்று மாவிளக்கு ஏந்தி ஐந்து ஊரை சேர்ந்த பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.இக்கோவிலில், பொங்கல் பூச்சாட்டு விழா, 34 ஆண்டுகளுக்கு பின் தற்போது நடைபெறுகிறது. பெரியாண்டிபாளையம், சின்னாண்டிபாளையம், சின்னியகவுண்டம்புதுார், குள்ளேகவுண்டம்புதுார் மற்றும் குளத்துப்புதுார் ஆகிய ஐந்து கிராம மக்கள் ஒன்று கூடி இந்த விழாவை நடத்துகின்றனர்.அம்மன் பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த 25ம் தேதி, கிராம சாந்தி செய்து துவங்கியது. 3ம் தேதி காலை கோவில் வளாகத்தில் விநாயகர் பொங்கல் வைத்தல், அம்மனுக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை, ஐந்து ஊர்களிலிருந்தும் பெண்கள் மாவிளக்கு ஏந்தி ஊர்வலமாக வந்து, அம்மனை வழிபட்டனர்.இன்று, காலை முதல் மதியம் வரை பொங்கல் வைத்தலும், அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும் நடைபெறுகிறது.