பதிவு செய்த நாள்
05
டிச
2018
11:12
விழுப்புரம்: பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் 206வது சுவாதி மகா ஹோமம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், பூவரசன்குப்பம் அமிர்தவள்ளி நாயிகா சமேத லட்சுமி நரசிம்மர் கோவிலில் கார்த்திகை மாதத்தையொட்டி, நேற்று சுவாதி நட்சத்திர பூஜைகள் நடைபெற்றது. இதையாட்டி, காலை 6.00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, 9.00 மணிக்கு லட்சுமி நரசிம்மர் தங்க கவசம் சாற்றப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்ததோடு, மகா தீபாராதனை நடைபெற்றது.பின், 9.30க்கு நரசிம்மர் சுதர்சன மகா ஹோமம் துவங்கியது. இதில், உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியோடு வரதராஜ பெருமாள் யாகசாலையில் எழுந்தருளினார். 11.00 மணிக்கு வசுத்தார ேஹாமம், பகல் 12.00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, 12.30க்கு கலசம் புறப்பாடு, உற்சவர், மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. மதியம் 1.00 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜெயக்குமார், அர்ச்சகர் பார்த்தசாரதி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.