பதிவு செய்த நாள்
05
டிச
2018
11:12
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்தி பெருமானுக்கு, பால் அபிஷேகம் நடந்தது. தங்க ரிஷ்ப வாகனத்தில் உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பழநி: பிரதோஷத்தை முன்னிட்டு, பழநி சிவன்கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பழநி கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் மாலை 4:30 மணிக்கு நந்திபகவான், மூலவருக்கும் பிரதோஷவேளையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சிவன் பார்வதி ரிஷபவாகனத்தில் உட்பிரகாரத்தில் வலம்வந்தனர். இடும்பன்கோயிலில் ரிஷபவாகனத்தில் உள்ள சிவகிரிநாதர், உமா மகேஸ்வரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி திருவுலா நடந்தது.மலைக்கோயில் கைலாசநாதர், சன்னதிவீதி வேளீஸ்வரர்கோயில், அ.கலையம்புத்துார் கல்லாணி சமேத கைலாசநாதர்கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில உட்பட சிவன்கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பால், பழங்கள், பொங்கல், சர்க்கரை உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது.