பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நாளை அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் பண்டரிபுரம் பாண்டுரங்கனாக ராஜஸ்தான் உடையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.நாளை, காலை 7:00 மணிக்கு சுப்ரபாதம், 7:30 மணிக்கு நித்யபடி பூஜை; அதனைத் தொடர்ந்து, மூலவர் சரநாராயண பெருமாள் பண்டரிபுரம் பாண்டுரங்கனாக ராஜஸ்தான் உடையில் அருள்பாலிக்கிறார்.காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மதியம் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை; மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு; 6:30 மணிக்கு சாயரட்சை பூஜை; இரவு 9:00 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடக்கிறது.