மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை அடுத்த மு.பரூர் வரதராஜ பெருமாள் கோவிலில் சுதர்சன ஹோமம் நடந்தது. இதையொட்டி நேற்று 4ம் தேதி சுவாதியையொட்டி, காலை 6:00 மணிக்கு கோ பூஜை, காலை 8:00 மணிக்கு மஹா சுதர்சன ஹோமம் நடந்தது. தொடர்ந்து, காலை 11:00 மணிக்கு லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம், காலை 11:30 மணிக்கு அபிஷேகம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.