விழுப்புரம்: விழுப்புரம் சங்கரமடத்தில் நடந்த கார்த்திகை சோமவார பூஜையில், காஞ்சி பீடாதிபதி விஜயேந்திரர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். விழுப்புரம் சங்கரமடத்திற்கு கடந்த 2ம் தேதி இரவு வருகை தந்த காஞ்சி பீடாதிபதி விஜயேந்திரர் நேற்று முன்தினம் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை சந்திரமவுலீஸ்வரர் பூஜையை நடத்தினார்.இதை தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு கார்த்திகை சோமவார பூஜையை நடத்திய, விஜயேந்திரர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். விழுப்புரம் அடுத்த பரனுார் கிருஷ்ண பிரேமி அண்ணா ஆசியுரை வழங்கினார்.கார்த்திகை சோமவார பூஜையில் ஏராளமான ஜெயின் சமூகத்தினர் பங்கேற்று, அருளாசிபெற்றனர். நேற்று காலை 10:00 மணிக்கு மூன்று காலசந்திரமவுலீஸ்வரர் பூஜை மற்றும் மாலை 6:00 மணிக்கு பிரதோஷ பூஜை நடந்தது.