Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கயத்தாறு ஆலயத்தில் தேர்ப்பவனி வே.பாளையத்தில் பிப்., 20ல்மஹா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநந்திக்கரையில் பரிகார பூஜை வரும் 19ல் திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2012
11:02

திற்பரப்பு : திருநத்திக்கரை நந்தீஸ்வரர் கோயிலில் நடந்து வரும் பரிகார பூஜை இன்று(17ம் தேதி) நிறைவடைகிறது. வரும் 19ம் தேதி சிவராத்திரி திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. பழமைவாய்ந்த திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயில் குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பன்னிரு சிவாலயங்களில் நான்காவது கோயிலாகும். இக்கோயிலில் சரியான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமலும், பூஜைகள் நேர்த்தியாக செய்யாததாலும் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன் முன்னோடியாக ஏழு நாட்கள் நடந்து வந்த பரிகார பூஜைகளும், ஹோமங்களும் இன்று(17ம் தேதி) நிறைவடைகிறது. கோயில் தந்திரி சங்கரநாராயணரு தலைமையில் புரோகிதர்கள் பூஜைகள் நடத்தினர். இன்று காலை மகாகணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், சமர்ப்பணம், சாயூஜ்ய பூஜை நடக்கிறது. தொடர்ந்து 25 கலசாபிஷேகத்துடன் உச்சபூஜை, மங்களாரதி தக்ஷணை கொடுக்கப்படுகிறது. வரும் 19ம் தேதி இவ்வருட சிவராத்திரி திருவிழாவிற்கான கொடியேற்றம் நடக்கிறது. மாலை 6ல் இருந்து 7.30க்கு இடைப்பட்ட சுபமுகூர்த்தத்தில் கொடியேற்றப்படுகிறது. பன்னிரு சிவாலயங்களில் சிவராத்திரியை முன்னிட்டு வருடாந்திர விழா நடக்கும் ஒரே கோயில் இதுவேயாகும். விழா நாட்களில் புராண பாராயணம், நவகாபிஷேகம், சமய சொற்பொழிவு, அன்னதானம், ஸ்ரீபூதபலி எழுந்தருளல், பஜனை, கலைநிகழ்ச்சி நடக்கிறது. எட்டாம் நாளான 26ம் தேதி மாலை 1008 திருவிளக்கு பூஜை, ஒன்பதாம் நாள் திருமணநிதி உதவி வழங்கல், சிறப்பு பூஜைகள், பத்தாம் நாள் காலை சுவாமி யானை மீது ஊர் பவனி, இரவு தாலப்பொலி, சுவாமி ஆறாட்டு, தொடர்ந்து கொடியிறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், இன்று புத்தாண்டு பிறப்பு மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதலே, ... மேலும்
 
temple news
நாமக்கல்; ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, 3 டன் எடையுள்ள பல்வேறு மலர்களால், ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; புத்தாண்டை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar