தாண்டிக்குடி: தாண்டிக்குடி முத்தாலம்மன், பட்டாளம்மன் கோயில் விழா மூன்று நாள் நடந்தது. விழாவில் சுவாமிக்கு, அபிஷேக, ஆராதனை மற்றும் ஆபரண பெட்டி அழைத்தல், மாவிளக்கு எடுத்தல், சேறு வேடம் பூசுதல், அக்னி சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல், முளைப்பாரி எடுத்தல், பால் குடம் மற்றும் தீர்த்தம் எடுத்தல் ஆகியன நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.