பதிவு செய்த நாள்
06
டிச
2018
12:12
சூலூர்:சூலூர் சுற்றுவட்டார கிராமங்களில், இந்து முன்னணி ரதத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில், இந்து முன்னணி சார்பில், வரும், 23, 24 மற்றும், 25ல் ஒரு லட்சம் குடும்பங்கள் பங்கேற்கும், சோடஷ மகாலட்சுமி யாகம் மற்றும் கஜ பூஜை, அஸ்வ பூஜை, 1,008 கோமாதா பூஜை நடக்கிறது.விழாவை முன்னிட்டு, சூலூர் ஒன்றியத்தில் மகாலட்சுமி ரத யாத்திரை நடந்தது.
முத்துக்கவுண்டன்புதூரில், சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்க தலைவர் சம்பத் குமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. குரும்பபாளையம், செங்கோட கவுண்டன் புதூர், ராசிபாளையம், அருகம்பாளையம், மாதப்பூர், சூலூர் உள்ளிட்ட இடங்களில், பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.மேற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் ராஜ்குமார், பா.ஜ., பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.