பழையஜெயங்கொண்டத்தில், ஐயப்ப பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2018 12:12
கிருஷ்ணராயபுரம்: பழையஜெயங்கொண்டத்தில், ஐயப்ப பக்தர்கள், அக்கினி குண்டம் இறங்கி, நேர்த்திக் கடன் செலுத்தினர். நிகழ்ச்சியையொட்டி, காலையில் கணபதி ஹோமம் செய்யப் பட்டது. பின்னர் சப்த கன்னிகளுக்கு அருள் பாலித்தல் நடந்தது. பின், இரவு, 7:00 மணியாளவில், சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், அக்கினி குண்டம் இறங்கி, நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பழையஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.