பதிவு செய்த நாள்
06
டிச
2018
12:12
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், சிவன் கோவில்களில் சிவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. குமாரபாளையம், அக்ரஹாரம் காசிவிஸ்வேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கும், நந்தி பகவானுக்கும், மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம், எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதேபோல் திருவள்ளுவர் நகர், மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில், கோட்டைமேடு சிவபெருமான் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், கள்ளிபாளையம் சிவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.