பதிவு செய்த நாள்
06
டிச
2018
12:12
மைசூரு: கர்நாடக மாநிலத்தில், 1,200 ஆண்டுகள் பழமையான கோவிலுக்குள் சென்று வழிபட, பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது இல்லை.கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, மைசூரிலிருந்து, 98 கி.மீ., தொலைவில் உள்ள சாமராஜ் நகர் - தமிழகத்தின் ஈரோடு மாவட்ட எல்லை பகுதியில், 1,200 ஆண்டுகள் பழமையான, கொங்கல்லி மல்லிகார்ஜுனா சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள், பெண்கள் செல்ல அனுமதி இல்லை.இது குறித்து, கோவில் பூசாரி, சதாசிவ மூர்த்தி சுவாமி கூறியதாவது:கோவில் மூலவரின் பெயர் மல்லிகார்ஜுனா சுவாமி. பிரம்மசாரியான சுவாமி, மலை மீது தியானத்தில் அமர்ந்துள்ளார். சுவாமியின் தியானத்திற்கு பங்கம் ஏற்படும் என்பதால், இதுவரை பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அடர்ந்த காட்டுப் பகுதியில் கோவில் அமைந்துள்ளதால், புலி, யானை, கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் நடமாட்டத்தால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதாலும், பெண்கள் கோவிலுக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆனால், கொங்கல்லி கிராமத்தில் நடக்கும் மல்லிகார்ஜுன சுவாமியின் தேர் திருவிழாவில், உள்ளூர் பெண்கள் மட்டும் பங்கேற்பர்.இவ்வாறு அவர் கூறினார்.