நடுவீரப்பட்டு:நடுவீரப்பட்டு நரியன்ஓடை கரையில் உள்ள பாதாள காளி மற்றும் பிரத்தியங்கார தேவி கோவிலில் நேற்று (டிசம்., 6ல்) கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடந்தது.
பூஜையை முன்னிட்டு நேற்று (டிசம்., 6ல்) மதியம் 12:00 மணிக்கு கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு, யாக வேள்விகள் துவங்கியது. மதியம் 1:30 மணிக்கு யாகத்தில் மிளகாய் வற்றல்கள் கொட்டப் பட்டு நிகும்பலா யாகம் நடந்தது.தொடர்ந்து யாக வேள்வியில் வைக்கப்பட்ட கலசம், ஆலய உலாவாக வந்து பிரத்தியங்கரா தேவிக்கு கலச அபிஷேகம் நடந்தது. மதியம் 2:00 மணிக்கு பாதாள காளிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து 2:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.