பதிவு செய்த நாள்
07
டிச
2018
02:12
சேலம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பெருமாள் கோவில்களில், பகல் பத்து உற்சவம் இன்று (டிசம்., 7ல்) தொடங்குகிறது.
சேலம், கோட்டை பெருமாள் கோவிலில், பகல் பத்து உற்சவம், இன்று (டிசம்., 7ல்) தொடங்கு கிறது. இதை முன்னிட்டு, டிச., 17 வரை, தினமும் மாலை, 5:00 மணிக்கு, அழகிரிநாதர், திருமா மணி மண்டபத்தில் எழுந்தருளல், திருமொழி வேதபாராயணம் சேவித்தல், திருவாராதனம், திருக்கொட்டாரத்தில் பக்தி உலாவுதல் ஆகியவை நடக்கிறது. டிச., 18ல் வைகுண்ட ஏகாதசி, 19 முதல், டிச., 29 வரை, ராப்பத்து உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
அதேபோல், இரண்டாவது அக்ரஹாரம் லட்சுமி நரசிம்ம பெருமாள், செவ்வாய்ப்பேட்டை வெங்கடாஜலபதி, பாண்டுரங்கநாதர், சின்னதிருப்பதி வெங்கடாஜலபதி உள்பட சேலம் மாவட்டத் திலுள்ள பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம் இன்று (டிசம்., 7ல்) தொடங்குகிறது.