Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் வெளிநாட்டு பக்தர்கள் ... 42 ஆண்டுகளுக்கு பின் தாய்வீடு: அம்மனுக்கு பொங்கல் வழிபாடு 42 ஆண்டுகளுக்கு பின் தாய்வீடு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமாந்துறையில் பொங்கிய சந்திர தீர்த்தம்
எழுத்தின் அளவு:
திருமாந்துறையில் பொங்கிய சந்திர தீர்த்தம்

பதிவு செய்த நாள்

08 டிச
2018
12:12

தஞ்சாவூர், கும்பகோணம் அருகே திருமாந்துறையில், யோகநாயகி அம்பாள் சமேத அட்சயநாத சுவாமி கோவிலில் உள்ள, சந்திர தீர்த்தக் கிணற்றில் திடீரென தண்ணீர் பொங்கி ஆர்ப்பரித்து வந்ததைக் கண்டு, பக்தர்கள் பரவசமடைந்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருமாந்துறையில், யோகநாயகி அம்பாள் சமேத அட்சயநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

திருவாவடுதுறை ஆதினத்திற்குச் சொந்தமான இக்கோவில், ரோகிணி நட்சத்திரத்திற்கும், விருச்சிக ராசிக்கும் உரிய பரிகாரத் தலமாகும்.காலமா முனிவருக்கும், நவக்கிரகங்களுக்கும் தொழு நோய் ஏற்பட்டதால், தங்களது ரோக நிவர்த்திக்காக, திருமாந்துறை வெள்ளெறுக்குக் காட்டில், பூஜை செய்து, 15 தினங்கள் சந்திரக் கிணறு தீர்த்தத்தில் நீராடி, உடல் நோய் நீங்கி, மனக்குறை அகன்றதாக தல வரலாறு கூறுகிறது.இதனருகே, சூரியனார் கோவில் உள்ளது. காலமா முனிவரும், நவக்கிரகங்களும், சூரியனார் கோவிலில் தங்கியிருந்து, திருமாந்துறை அட்சயநாத சுவாமியைத் தரிசித்து நலம் அடைந்தார்கள் என்பதால், நலமுடன் குறையில்லாமல் வாழ, திருமாந்துறை அட்சயநாத சுவாமியைத் தரிசித்த பின், சூரியனார் கோவில் சென்று வழிபடுவது, இன்றைக்கும் வழக்கமாக இருக்கிறது.அட்சயநாதர் கோவிலுக்குள் அரை சந்திர வடிவில், சந்திர தீர்த்தக் கிணறு அமைந்திருக்கிறது. இதில், வளர்பிறை நாட்களில் தண்ணீர் அதிகரிப்பதும், தேய்பிறை நாட்களில் தண்ணீர் குறைவதும் காலங்காலமாக நடைபெறுவது நிகழ்வாகும்.இந்நிலையில் நேற்று முன்தினம் கார்த்திகை அமாவாசை நாளில், திடீரென சந்திர தீர்த்தத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து பொங்கி வழிந்தது. இதைப் பார்த்து, பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.இதுபற்றி, ராஜி சிவாச்சியார் கூறியதாவது:எப்போதும், அமாவாசை நாளில், சந்திரக் கிணற்றில் தண்ணீர் ரொம்பவும் கீழேதான் இருக்கும். ஆனால், நேற்று முன்தினம், அபிஷேகத்திற்கு தண்ணீர் எடுக்கப் போனபோது, மேலே ததும்பி வழிந்தது. இதைக் கண்ட பக்தர்கள் புனித நீராட ஆரம்பித்து விட்டார்கள். இதுபற்றி, திருவாவடுதுறை ஆதினத்திற்கு தகவல் அனுப்பினேன். அவர்களும் வருகை வந்து, புனித நீராடி சிறப்பு பூஜைகள் செய்தார்கள். காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடியும், நேற்றும் அமாவாசை இருந்த போதும், சந்திரக் கிணற்றில் தண்ணீர் குறையவில்லை என்பது ஆச்சரியம்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar