சபரிமலை மதியத்துக்கு பின் வரும் பக்தர்கள் நெய்யபிஷேகத்துக்கு புதிய ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08டிச 2018 02:12
சபரிமலை: சபரிமலையில் மதியத்துக்கு பின் வரும் பக்தர்கள் நெய்யபிஷேகம் செய்ய புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் நெய் பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டு அடுத்த நாள் அபிஷேகம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.சபரிமலையில் மண்டல - மகரவிளக்கு காலத்தில் எல்லா நாட்களிலும் அதிகாலை 3:15 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறுகிறது. அதன் பின்னர் வரும் பக்தர்கள் மறு நாள் அதிகாலை வரை காத்திருக்க வேண்டும்.
இதனால் சன்னிதானத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போதுள்ள சூழ்நிலையில் சில இடங்களில் பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் சிரமமப்படுகின்றனர்.
இதனால் தேவசம்போர்டு தற்போது ஒரு புதிய ஏற்பாடு செய்துள்ளது. சன்னிதான வடக்கு வாசலில் ஒரு கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் நெய்யை கொடுத்தால் அபிஷேகம் செய்த நெய் பிரசாதமாக வழங்கப்படும். சேகரிக்கப்படும் நெய் அடுத்த நாள் காலை ஐயப்பனின் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்படும் என்ற உறுதியை தேவசம்போர்டு அளித்துள்ளது.