பதிவு செய்த நாள்
08
டிச
2018
03:12
பொள்ளாச்சி:பொங்கலூரில் நடக்கும் சோடஷ மகாலட்சுமி மகா யாகத்துக்கு பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், இந்து முன்னணி சார்பில் சிவபார்வதி ரத யாத்திரை நடத்தப்பட்டது.பொங்கலூர் பயணியர் தில்லை நகரில் வரும், 23, 24 மற்றும் 25ம் தேதிகளில் சோடஷ மகாலட்சுமி மகாயாகம் நடக்கிறது. 23ம் தேதி காலை, 5:30 மணிக்கு கணபதி ஹோமம், கஜபூஜை, 108 அஸ்வ பூஜை, மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கிறது.
வரும், 24ம் தேதி காலை, 7:00 மணிக்கு யாக துவக்கம், 1,008 கோ பூஜை, ஆண்டாள் திருக் கல்யாணம், 25ம் தேதி மதியம் துறவியர், மடாதிபதிகள் ஆசியுடன் நிறைவு பெறுகிறது.யாகம் குறித்து தெரிவித்து, பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கும் வகையில், பொள்ளாச்சியில் ரத யாத்திரை நடக்கிறது. நேற்று (டிசம்., 7ல்)காலை கேரள சமாஜத்தில் துவங்கி, உடுமலை ரோடு டீச்சர்ஸ் காலனி, பல்வேறு பகுதிகளுக்கு சென்ற சிவபார்வதி ரதத்துக்கு, பொதுமக்கள் பூஜை செய்தனர்.
ரத யாத்திரைக்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட பொதுச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் நகரப் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.இன்று, (8ம் தேதி) சூளேஸ்வரன்பட்டி, ஜமீன் ஊத்துக்குளிக்கு ரதம் விஜயம் செய்கிறது. நாளை, (9ம் தேதி) கோலார்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிக்கு செல்கிறது.நெகமம்நெகமம் வந்த ரதத்துக்கு, கோ பூஜை நடந்தது. கப்பளாங்கரை, தேவணாம்பாளையம், சேரிபாளையம், பெரியகளந்தை, காட்டம்பட்டி, நெகமம், ஏரிபட்டி, மரம்புடுங்கிகவுண்டனூர் கிராமங்களில் ரத யாத்திரை நடந்தது. ரதத்தை வரவேற்ற மக்கள் செங்கல், நெய் வழங்கி, சிறப்பு பூஜை மேற்கொண்டனர்.