Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சோழவந்தான் அருகே மேலக்கால் தர்ஹா ... காரமடை அரங்கநாதர் கோவிலில் பகல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரவிசங்கர் யோகா நிகழ்ச்சிக்கு தஞ்சை பெரிய கோவிலில் தடை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2018
03:12

மதுரை:தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஸ்ரீரவிசங்கரின், வாழும் கலை அமைப்பு யோகா நடத்த, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்தது.கும்பகோணம், திருப்பன்துறை வெங்கடேஷ் தாக்கல் செய்த மனு:தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலை, உலக பாரம்பரிய சின்னமாக, யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது.

அதை பாதுகாக்கும் வகையில், கோவில் வளாகத்தில், எத்தகைய தனியார் அமைப்புகளும் நிகழ்ச்சி நடத்த அனுமதிப்பதில்லை.

ஸ்ரீரவிசங்கரின், வாழும் கலை அமைப்பு சார்பில், இன்றும், நாளையும் (டிசம்.,7, 8ல்) யோகா நடத்த, பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அனுமதி அளித்ததை ரத்து செய்து, நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனு செய்தார்.இதை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி கள்,கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு உத்தரவு:கோவிலுக்கு வெளியே பல இடங்கள் உள்ளன. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இக்கோவிலில் யோகா நடத்துவது ஏன்? கோவில் வளாகத்தில், வாழும் கலை அமைப்பு யோகா நடத்த, தடை விதிக்கப்படுகிறது. அங்கு இத்தகைய நிகழ்ச்சி நடக்கவில்லை என்பதை உறுதி செய்து, தஞ்சாவூர் கலெக்டர், டிச., 10ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பெரிய கோவிலில் நேற்று (டிசம்., 7ல்) காலை, விழா பந்தலில் அமர்ந்த சிலர், விழாவை ரத்து செய்யவேண்டும் என கோஷமிட்டனர். எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில், 150க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட, 28 பேரை கைது செய்தனர். உயர் நீதிமன்ற உத்தரவு வெளியானதும், கோவிலில் நடைபெற இருந்த நிகழ்ச்சி, தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு மாற்றப்பட்டது. பந்தல்களும் பிரிக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா ... மேலும்
 
temple news
சென்னை; ஆதிமூலப் பெருமாள் கோவிலில் திருப்பணி மேற்கொள்ளவதற்காக பாலாலயம் செய்யப்பட்டது. சென்னை, ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று  அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின் ... மேலும்
 
temple news
விருதுநகர்; தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar