Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உடுமலை, நவநீத கிருஷ்ண சுவாமி ... திருவந்திபுரத்தில் தேவநாத சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் சோடஷ மகாலட்சுமி யாகம் நாளை (டிசம்., 8ல்) சிலை பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2018
03:12

திருப்பூர்:இந்து முன்னணி நடத்தும் சோடஷ மகாலட்சுமி யாகத்துக்கு மகாலட்சுமி சிலை பிரதிஷ்டை நாளை (டிசம்., 8ல்)நடைபெறவுள்ளது.இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாவட்டம், பொங்கலூரில் வரும் 23ம் தேதி முதல் மூன்று நாள் சோடஷ மகாலட்சுமி மகா யாகம், கஜபூஜை, அஸ்வ மேத பூஜை மற்றும் கோமாதா பூஜை ஆகியன நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

இந்து முன்னணி மாநில செயலாளர் கிேஷார் குமார் கூறியதாவது:மகா யாகத்துக்காக சந்தன காப்பு அலங்காரத்தில் மகாலட்சுமியின் மூலவர் சிலையும், அபிஷேக வழிபாட்டுக்காக ஐம்பொன்னால் செய்த உற்சவர் சிலையும் அமைக்கப்படுகிறது.

நாளை, 9ம் தேதி காலை 9:00 மணிக்கு இவை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பொங்கலூர் மாகாளியம்மன் கோவிலிலிருந்து 1,008 பெண்கள் தீர்த்தக் குடம் எடுத்து வந்து உற்சவருக்கு அபிஷேகம் நடத்தப்படும்.யாக பூஜை நிறைவடையும் வரை தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தீர்த்தக் குடம் எடுத்து வந்து உற்சவருக்கு அபிஷேகம் நடைபெறும்.

இந்த மஞ்சள் அபிஷேகத்தை பக்தர்கள் நேரடியாக செய்யலாம்.யாக பூஜை நிகழ்வில் பங்கேற்க பதிவு செய்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. மேலும் அஸ்வ மேத பூஜைக்கு இதுவரை 140 குதிரைகளும், கோமாதா பூஜைக்கு 1,480 நாட்டு பசு மாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் வகையில் மொத்தம் 4,500 பேர் அடங்கிய 40 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பூஜை வாரியாக வரவேற்புகுழு, அன்னதானக் குழு, உபசரிப்பு குழு, பிரசாதம் வினிேயாக குழு, தகவல் தொடர்பு குழு, போக்குவரத்து குழு, அரசு துறை ஒருங்கிணைப்பு குழு என அனைத்து பணிகளுக்கும் குழுக்கள் அமைத்து, பொறுப்பு வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லி: ‘ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பதுதான் ஒரே ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் கோலாகலமாக நடந்த மணிவிழாவின் போது குருமகா சன்னிதானம் சிவஞான கொலு ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar