அவலூர்பேட்டை மாரியம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08டிச 2018 04:12
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அவலூர்பேட்டை கடைவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
இரவு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது, அறங்காவலர் குழு தலைவர் சகாதேவன் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.மரக்காணம்அனுமந்தையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து கோவில் முன் யாகசாலை அமைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இரவு 12.00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மனை பூ பல்லக்கில் பக்தர்கள் தூக்கி வந்து ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடி ஊஞ்சல் உற்சவம் நடத்தினர். பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.கண்டாச்சிபுரம்மடவிளாகம் அங்காள பரமேஸ்வரி கோவிலில், நேற்று முன்தினம் (டிசம்., 6ல்) இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. முன்னதாக மாலை 7:00 மணிக்கு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.இரவு 9:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.