பதிவு செய்த நாள்
08
டிச
2018
04:12
திருத்தணி: முருகன் கோவில் மற்றும் அதன் துணை கோவில்களில் நடைபெற உள்ள மூன்று முக்கிய விழாக்களின் அழைப்பிதழ்களை, முதல்வர், துணை முதல்வருக்கு, கோவில் நிர்வாகம் வழங்கியது.திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான மத்தூர் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலின் மஹா கும்பாபிஷேகம், 12ம் தேதி நடைபெறுகிறது.
அதே போல், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், இம்மாதம், 22ம் தேதி, முக்கிய விழாவான ஆருத்ரா விழா நடக்கவுள்ளது.இதுதவிர, திருத்தணி முருகன் கோவிலில், 31ம் தேதி, திருப்படித் திருவிழா மற்றும் ஜன., 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசன விழா நடைபெற உள்ளது.
இந்த மூன்று விழாக்களிலும், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோர் நேரில் சென்று, முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சருக்கு, அழைப்பிதழ்கள் மற்றும் பிரசாதம் வழங்கி அழைத்தனர்.
அவர்களும், விழாவில் பங்கேற்க வருவதாக கூறியுள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித் துள்ளது.