ராஜபாளையம்:ராஜபாளையம் சொக்கர் கோயில் ஐயப்ப சுவாமி சன்னதியில் 40 மணி நேரம் தொடர் நாம சங்கீர்த்தன பஜனை நடந்தது. இதை முன்னிட்டு ஐயப்பன் சாஸ்தா அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று காலை 6:00 மணிக்கு துவங்கி இன்று இரவு 10:30 வரை நடக்கிறது.நாராயணீயம் பாராயணம், பாண்டுரங்கன் பஜன் மண்டலி, பி.ஏ.சி.ஆர் இசைப்பள்ளி, துளசி தாசர் பஜனை குழு, வாழும் கலை மையம் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள 15 ஐயப்ப பக்தர்கள் பஜனை குழுவினர் இணைந்து 2 மணி நேரம் வீதம் ஐயப்பன் துதியை பாடினர். ஏற்பாடுகளை ஐயப்ப சுவாமி கோயில் மண்டல பூஜை கமிட்டியினர் செய்திருந்தனர்.