சரநாராயண பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2018 12:12
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், பகல்பத்து உற்சவத்தில் பெருமாள் வேணுகோபால் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம், திருமொழித் திருநாள் (பகல் பத்து) உற்சவம், காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனத்துடன் துவங்கியது.மாலை 3:00 மணிக்கு பிரபந்த சேவை, சேவாகாலம் துவக்கம், மாலை 4.30 மணிக்கு பிரபந்த சாற்றுமுறை, 5:00 மணிக்கு உற்சவர் பெருமாள் வேணுகோபாலன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.