Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் ... வேட்டை வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கல்யாணம் வேட்டை வெங்கடேஸ்வர பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பராந்தக சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பராந்தக சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

11 டிச
2018
11:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளாறு அருகே உள்ள நெற்குணம் கிராமத்தில், முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு கண்டறியப்பட்டது. இவ்வூர் செல்லியம்மன் கோவில் முன் உள்ள பலகை கல்லில் கல்வெட்டு இருப்பதை, கல்வெட்டு ஆய்வாளர்களுக்கு, ப.கோவிந்த பிள்ளை தகவல் அளித்தார். அதன்படி, முதுபெரும் கல்வெட்டு அறிஞர், சு.ராஜகோபால், கல்வெட்டு ஆய்வாளர், ப.பூபாலன், டாக்டர் உ.வே.சா., நுால் நிலையக் காப்பாட்சியர், கோ.உத்திராடம், கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தனர்.

இந்த கல்வெட்டு, முதலாம் பராந்தக சோழன் காலத்தைச் சேர்ந்தது என்றும், நெற்குன்றத்துாரில் இருந்த ஏரிக்கு, சோழ சிற்றரசர் ஒருவர், பராமரிப்பு நிலம் வழங்கி, வரிச் சலுகை அளித்த செய்தியை, அந்த கல்வெட்டு தெரிவிக்கிறது.இன்றைய நெற்குணம் என்ற ஊர், கல்வெட்டில், நெற்குன்றம் என, அழைக்கப்பட்டுள்ளது.முதலாம் பராந்தக சோழனின், 24வது ஆண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் இருக்கும் முக்கிய தகவல்கள்:சிங்கபுர நாட்டு கிழக்கு வழியில், நெற்குன்றத்தில் இருந்த ஏரி பராமரிப்புக்காக, நிருபதுங்கமங்கலப் பேரரையன் என்பவரது மகன், நம்பிமல்லன் என்பவர் நிலம் கொடுத்தார்.ஏரியை பராமரிக்க கொடுக்கப்படும் நிலம், பொதுவாக, ஏரிப்பட்டி என, அழைக்கப்படும். இந்நிலம் மூன்று பகுதிகளாக, மருதஞ்செறு, கொடுமாடி, கழுவல் என, மூன்று பெயர்களில் இருந்தது.ஏரி பராமரிப்புக்காக கொடுக்கப்பட்ட இந்நிலங்கள் வரி இல்லாமல் கொடுக்கப்பட்டவை. நெற்குன்ற ஊரார், வரி இல்லாத நிலம் என, ஏற்றுக் கொண்டனர்.பின்னாளில் வரி விதித்தால், அவர்கள் ஏழு நரகங்களில் கீழான நரகம் செல்வர் என்றும், கொடுக்கப்பட்ட நிலத்திற்கு வில்லங்கம் செய்பவர்கள். அபகரிப்பவர்கள், ஏழு நரகங்களில் கீழான நரகம் செல்வர் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலத்தை வழங்கிய நம்பிமல்லன், வரி நீக்கியதோடு, கூடுதலாக, ஏரிப் பாசனத்தில் உள்ள நிலங்கள் வழியான ஆனைவாய், மன்றுபாடு முதலிய வரி வருவாய்களும் கிடைக்கச் செய்துள்ளார்.இவ்வாறு, அதில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.கல்வெட்டை ஆராய்ந்த, அறிஞர், சு.ராஜகோபால் தெரிவித்த தாவது:இப்பகுதியில் சோழர் ஆட்சி துவங்கிய நிலையில், பொறிக்கப்பட்ட கல்வெட்டு, ஏற்கனவே இருந்த நிருபதுங்க மங்கலப்பேரரையன் என்ற, இப்பகுதி பல்லவரின் சிற்றரசர், சோழர் காலத்திலும் சிற்றரசராகச் செல்வாக்குடன் தொடர்கிறார்.அவரது மகனும் சிற்றரசராகத் தொடர்வதோடு, இப்பகுதி வரி விதிப்பு, வரிச் சலுகை அதிகாரங்களும் பெற்று விளங்கியுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வண்ண ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சிருங்கேரி ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள் 2 மணி நேரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே ஆதிவராஹி அம்மன் கோயிலில் உள்ள யோக நரசிம்மருக்கு சுதர்சன ஜெயந்தி ஆனி மாத சுவாதி ... மேலும்
 
temple news
நிலக்கோட்டை;திருச்செந்துார் முருகன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக திண்டுக்கல்மாவட்டம் நிலக்கோட்டை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar