பதிவு செய்த நாள்
11
டிச
2018
03:12
குன்னூர்:குன்னூர் பாய்ஸ்கம்பெனி குரூஸ்பெட் கிராமத்தில் அமைந்துள்ள பார்பரம்மாள் குருசடியின், 103வது ஆண்டு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.கடந்த, 5ம் தேதி மாலை, 5:30 மணிக்கு, நவநாள் ஜெப ஆராதனையுடன் விழா துவங்கியது. முக்கியத் திருவிழா நாளான நேற்று முன்தினம் (டிசம்., 9ல்), காலை, 11:30 மணிக்கு ஆடம்பர பாடல் திருப்பலியும், தொடர்ந்து தேர் பவனியும் நடந்தது. பகல், 1:00 மணிக்கு, அன்பின் விருந்து நிகழ்ச்சியும், மாலை, 6:00 மணிக்கு நன்றி வழிபாடும் நடந்தது. விழாவில், குரூஸ்பெட் கிராம சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, திரளான பங்கு மக்கள் பங்கேற்றனர்.