பதிவு செய்த நாள்
12
டிச
2018
10:12
திருச்சி: திருச்சி மாவட்டம் திருாவனைக்காவல் ஜம்புகேஸ்வர்- அகிலாண்டேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. இதில், மூலவர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோபுர கலசத்தில், புனித நீரை காஞ்சி விஜயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் ஊற்றினார்.
பஞ்சபூத தலங்களில் நீர்த்தலமாக விளங்கும், திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலை புதுப்பித்து, திருப்பணிகள் செய்யப்பட்டது. திருப்பணிகள் நிறைவடைந்து டிச.,9ல் பரிவார தெய்வங்களுக்கும், விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக, இன்று (டிச.,12ல்) ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சுவாமிகளுக்கும், கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. மூலவர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோபுர கலசத்தில், புனித நீரை காஞ்சி விஜயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் ஊற்றினார். கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.