சாயல்குடி: சாயல்குடியில் கைலாசநாதர் சமேத மீனாட்சியம்பிகை கோயிலில் சோமவார நிறைவை முன்னிட்டு இரவு 7:00 முதல் 9:00 மணிவரை அன்னாபிஷேக பூஜை நடந்தது. மூலவர் கைலாசநாதருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 16 படி பச்சரிசியில் சாதம் வடிக்கப்பட்டு, சிவலிங்கத்தின் திருமேனியில் அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டது. பெண்கள் நெய்விளக்கேற்றி, சிவபுராணம், தேவாரம், திருவாசகப்பாடல்கள், பஜனை, நாமாவளி ஆகியவற்றை செய்தனர்.பூஜைகளை கோயில் ஸ்தானிகம் ரவிச்சந்திர குருக்கள் செய்தார். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மாதாந்திர பிரதோஷ வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.