வடமதுரை: வடமதுரை மகா காளியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. திருச்சி ரோடு மங்கம்மாள் கேணியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால் குடங்களுடன் ஊர்வலமாக ஏழுமலையான் கோயில் சென்று பின்னர், அங்கிருந்து தேரோடும் வீதிகளை சுற்றி கோயிலுக்கு வந்தனர். ஹோமம், திருமஞ்சனம் மற்றும் பல்வேறு பூஜைகளை தொடர்ந்து மகாதீபாராதனை, அன்னதானம் நடந்தது. பின்னர் அலங்கார ரதத்தில் அம்மன் வீதியுலா வந்தார். விழா ஏற்பாட்டினை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.