கொங்கம்பட்டு பச்சைவாழியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2018 12:12
நெட்டப்பாக்கம்: கொங்கம்பட்டு பச்சைவாழியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா வரும் 14ம் தேதி நடக்கிறது.மடுகரை அடுத்துள்ள கொங்கம்பட்டு கிராமத்தில் பச்சைவாழியம்மன், அங்காளம்மன், பெரிய பாளையத்தம்மன் ஆகிய கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு இதற்கான கும்பாபிஷேக விழா வரும் 14ம் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி, இன்று காலை அனுக்கிரக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், தன பூஜை, கோ பூஜை நடக்கிறது. 13ம் தேதி இரண்டாம் கால பூஜை, சிலைகள் கரிகோலம் கண் திறப்பு, மாலை மூன்றாம் கால பூஜை, வரும் 14ம் தேதி நான்காம் கால பூஜை, காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.