கூடலுார்: சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களுக்கு பெர்மிட் வழங்கும் தேனி பழனிசெட்டிபட்டி சோதனைச்சாவடி, குமுளி பஸ் ஸ்டாண்டில் கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆய்வு செய்தார். சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களுக்கு தற்காலிக பெர்மிட் பழனிசெட்டிபட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. அங்கு சென்ற கலெக்டர் பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களிடம் பெர்மிட் விரைவாக கிடைக்கிறதா என கேட்டறிந்தார். பக்தர்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வாகனங்களுக்கு ஆவணங்களை சரிபார்த்து விரைவாக பெர்மிட் வழங்கவும், இது குறித்த தகவல்களை பக்தர்களுக்கு நன்றாக தெரியும்படி முக்கிய சந்திப்புகளில் வைத்திடவும் அறிவுறுத்தினார்.தொடர்ந்து குமுளி பஸ் ஸ்டாண்டில் பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ள குடிநீர்,கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி ,வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முகமது உடனிருந்தனர்.