வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள, ஐயப்ப சுவாமி கோவிலின், 32ம் ஆண்டு மண்டல பூஜை திருவிழா, நேற்று காலை, 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கொடியை ராஜகுரு சுப்புராஜ் குருசாமி ஏற்றினார். முன்னதாக சுவாமிக்கு பல்வேறு வகையான அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது.விழாவில், வரும், 15ம் தேதி காலை, 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு நல்லகாத்து ஆற்றில் இருந்து ஐயப்ப பக்தர்கள் பாலக்கொம்பு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வருகின்றனர். வரும், 16ம் தேதி வரை நடக்கும் மண்டல பூஜை விழாவுக்கான ஏற்பாடுகளை, அகிலபாரத ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.