பதிவு செய்த நாள்
13
டிச
2018
03:12
சென்னை: தைப்பூசத்தை முன்னிட்டு, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி.,யானது, மலஷேியா, கம்போடியா மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு, விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.ஜனவரி மாதம் வரும் தைப்பூசத்தை முன்னிட்டு, மலஷேியாவில் புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவில் உட்பட, முக்கிய சுற்றுலா தலங்களுக்கு சென்று வர, சென்னையில் இருந்து, ஜன., 20ம் தேதி, விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 33 ஆயிரம் ரூபாய் கட்டணம்.கம்போடியா, வியட்நாம் மற்றும் லாவோஸ் செல்லவும், விமான சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து, பிப்., 13ல் புறப்படும், எட்டு நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 1.30 லட்சம் ரூபாய் கட்டணம்.இதில், விமான கட்டணம், மூன்று நட்சத்திர ஓட்டலில் தங்கும் செலவு, முக்கிய இடங்களில் நுழைவு கட்டணம், உணவு மற்றும் சுற்றுலா வழிகாட்டி கட்டணங்கள் அடங்கும்.மேலும் தகவலுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவகத்தை, 90031 40718, 90031 40682, 90030 24169 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், www.irctctourism.com என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.