வரதராஜப்பெருமாள் கோவிலில் ஆழ்வார் ஆச்சாரியார் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2018 03:12
மேட்டுப்பாளையம்: இலுப்பநத்தத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், 12 ஆழ்வார் ஆச்சாரியார் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிறுமுகையை அடுத்த இலுப்பநத்தம் வையாளிபாளையம் திம்மனுாரில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. சனிக்கிழமைகள் மற்றும் புரட்டாசி மாதத்தில், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். கோவிலில் புதிதாக, ஆழ்வார் ஆச்சாரியார் சிலைகள் வைக்கும் சம்ரோக் ஷன் விழா நடந்தது. காரமடை வேதவியாச சுதர்சன பட்டர் யாக வேள்விகளை நடத்தி, 12 ஆழ்வார் ஆச்சாரியார் சிலைகளை பிரதிஷ்டை செய்தார். பின்பு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜை நடந்தது.கோவில் அர்ச்சகர் சாய்ராம் பாலாஜி, திருப்பணி உபயதாரர்கள் ரங்கராஜ், பேபி சரோஜா, கோபாலகிருஷ்ணன், மாலதி ரங்கையா, புஜ்ஜம்மாள் உள்பட ஊர் பொது மக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.