Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வரதராஜப்பெருமாள் கோவிலில் ஆழ்வார் ... திருப்பரங்குன்றம் கோயில் நடைதிறப்பில் மாற்றம் திருப்பரங்குன்றம் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் 27ம் தேதி மண்டல பூஜை: 23ல் தங்க அங்கி புறப்பாடு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் 27ம் தேதி மண்டல பூஜை: 23ல் தங்க அங்கி புறப்பாடு

பதிவு செய்த நாள்

14 டிச
2018
11:12

சபரிமலை: சபரிமலையில், வரும், 27-ம் தேதி மண்டலபூஜை நடைபெறுகிறது. இதையொட்டி, ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து, தங்க அங்கி பவனி, 23-ம் தேதி காலையில் புறப்படுகிறது. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல், தொடர்ச்சியாக, 41 நாட்கள் நடைபெறும் பூஜைகளின் நிறைவு நாளில், மண்டல பூஜை கொண்டாடப்படும்.வழிபாடு இந்த ஆண்டு மண்டல பூஜை, 27-ம் தேதி நடைபெறுகிறது. 1973-ல், திருவிதாங்கூர் மன்னர், சித்திரை திருநாள் வழங்கிய தங்க அங்கி, மண்டலபூஜைக்கு முந்தைய நாளிலும், மண்டல பூஜையன்றும், மூலவருக்கு அணிவிக்கப்பட்டிருக்கும்.

கேரளா, பத்தணந்திட்டை மாவட்டம், ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் வைக்கப்பட்டு உள்ள இந்த அங்கி, மண்டல பூஜைக்கு, நான்கு நாட்கள் முன்னதாக, பவனியாக எடுத்து வரப்படும். சபரிமலை போன்று வடிவமைக்கப்பட்ட ரதத்தில், அங்கி வைக்கப்பட்டு, வழிநெடுகிலும் பக்தர்களால் வழிபாடு செய்யப்படும். இந்த ஆண்டு, வரும், 23-ம் தேதி காலை, 6:30 மணிக்கு, ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலிலிருந்து, பவனி பலத்த பாதுகாப்புடன் புறப்படுகிறது. 23-ல், ஓமல்லுார் பகவதி கோவிலில்; 24- - கோந்நி முருங்கமங்கலம் கோவில்; 25- - பெருநாடு சாஸ்தா கோவிலில் தங்கும் இந்த பவனி, 26-ம் தேதி மதியம், பம்பை வந்தடையும்.

தீபாராதனை: அங்கிருந்து, மாலை, 3:00 மணிக்கு புறப்பட்டு, மூலவருக்கு, மாலை 6:30 மணிக்கு, தங்கஅங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். மறுநாள், 27 இரவு, 11:00 மணிக்கு நடை அடைக்கப் படும். மகரவிளக்கு கால பூஜைக்காக, 30-ம் தேதி மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். அன்று வேறு எந்த பூஜைகளும் நடைபெறாது. 31ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறந்து, மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் துவங்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar